1.
அரசு சார்ந்த செய்திகள் (Question 1-10):
பல்வேறு மாநிலங்கள் உருவான 'தினத்தையொட்டி (நவம்பர் 1) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-இன்படி மதராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரியாக ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அதே ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்டது. அதே தினத்தில் மத்திய பிரதேசம் தனி மாநிலமாகவும் லட்சத்தீவு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டது.
அதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் கடந்த 1966, நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் கடந்த 2000-ஆம் ஆண்டு இதே தேதியில் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது. இந்நிலையில், இந்த உருவான தினத்துக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாழ்த்து தெரிவித்து திரௌபதி முர்மு வெளியிட்ட பதிவில், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரம்,கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்கள் அமைதியும் வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உங்களின் பங்களிப்பு தொடர் வேண்டும் என விரும்புகிறேன்' என குறிப்பிட்டார்.
மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?